
அநுராதபுரம் மற்றும் மஹவிலச்சிய பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பூசணி செய்கையிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ள பாரிய விளைச்சலைக் கொள்வனவு செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அநுராதபுரம் மாவட்ட செயலாளருக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது.
பூசணியை கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதியை மாவட்ட செயலாளருக்கு வழங்குமாறு பிரதேச அபிவிருத்தி வங்கிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை வழங்கியுள்ளார்.
கொள்வனவு செய்யப்படும் பூசணிகளை அநுராதபுர மாவட்ட செயலாளரின் உதவியுடன் கொழும்புக்குக் கொண்டுவந்து மாவட்டத்தின் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்குப் பகிர்ந்தளிக்குமாறு கொழும்பு மாவட்ட செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமது பூசணி அறுவடையை அநுராதபுர மாவட்ட செயலாளருக்கு வழங்குமாறு அரசாங்கம் விவசாய சமூகத்தினரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.