
கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 703 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியம் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது.
கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நேற்றைய தினம் 48 மில்லியன் ரூபா அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் கங்காராம வெசாக் நிதியத்திலிருந்து 10 மில்லியன் ரூபாவும் களனி பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் சங்கத்திடமிருந்து 2.5 மில்லியன் ரூபாவும் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொறியியலாளர்கள் சங்கம் 2.5 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.
கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு எஸ்.டீ அமரசிங்க ஒரு மில்லியன் ரூபாவையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.