
பாம்பு கடித்து இறந்த கேரள இளம்பெண்ணின் மரணம் கொலை என பொலிஸ் விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளமை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியை சேர்ந்த உத்ரா என்ற பெண்ணுக்கு திருமணம் முடித்து 1 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் கணவருடன் தூங்கிக்கொண்டிருந்த போது அவரை பாம்பு கடித்துள்ளது.
அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு மீண்டும் சிகிச்சை தேவைப்பட்டதால் தாய் வீட்டிலேயே தங்கி இருந்துள்ளார்.
இதற்கிடையில் கடந்த 6-ம் திகதி மீண்டும் பாம்பு கடித்து உத்ரா இறந்துள்ளார். இதற்கிடையில் உத்ராவின் கணவர் மீது சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் பொலிஸில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து பொலிஸார் உத்ராவின் கணவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கொலையாளி அவர் தான் என்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ”சூரஜிடம் விசாரணை நடத்துவதற்கு முன்பு அவரது மொபைல்போனை சோதித்தோம். உத்ராவை முதலில் பாம்பு கடித்த மார்ச் 2-ம் தேதிக்கு முந்தினநாள் வரை அடூரைச் சார்ந்த பாம்பாட்டி ஒருவரிடம் போனில் பேசியிருப்பது கண்டறியப்பட்டது.
அந்தப் பாம்பாட்டியைப் பிடித்து விசாரணை நடத்தியபோது கருமூர்க்கன் என்ற கொடும் விஷம் கொண்ட பாம்பை 10,000 ரூபாய் கொடுத்து சூரஜ் விலைக்கு வாங்கியது தெரியவந்தது.
ஜன்னல் வழியாகப் பாம்பு புகுந்திருக்கலாம் என சூரஜ் முதலில் தெரிவித்தார். தரையில் இருந்து வீட்டின் இரண்டாவது மாடிக்கு பாம்பு செல்வது என்பது சாத்தியம் இல்லாதது.
அப்படி ஜன்னல் வழியாகப் பாம்பு சென்றிருந்தாலும் முதலில் படுத்திருந்த சூரஜ், அதற்கு அடுத்து படுத்திருந்த அவர்களது மகனையும் தாண்டிச் சென்று உத்ராவை பாம்பு எப்படி கடிக்கும் எனக் கேட்டோம். சூரஜ் பதில்கூற முடியாமல் நின்றார்.
மனைவியைக் கொலை செய்வதற்காக ஆறு மாதங்களாகப் பாம்பாட்டியிடம் சூரஜ் போனில் பேசிவந்துள்ளார். மனைவியை கணவர் தான் கொண்டார் என்பது உறுதியாகியுள்ளது. எனினும், பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.